தொடங்கு…


வாசிப்பை
நிறுத்தாதே
உன் மொழி
நேசிப்பை
யாசிப்பதில்
யோசிக்க ஏதுண்டு?
மனித
நரிகள்
வாழும்
உலகக் கூட்டில்
தமிழ்
வரிகளால்
வாழும் பாக்கியம்
எழுத்தாளருக்கே
உருத்தாகும்…
அறம்
மறந்து
புறம் பாடாதே
புலன்
இழந்து
வீணே புலம்பாதே..
மானிட ஆட்டம்
வெறும்
சூதாட்டமே.
அடங்கும். அடக்கு.
சிரம்
நிறைந்த
சிந்தனைகள்
சீரழிந்தால் உன்
அகம் நிறைந்த
ஆனந்தம்
அனலாகும்.
நிந்திப்பதை
நிறுத்தி நீ
சிந்திப்பதை
தொடங்கு…

 

கவிஞர் தயாநிதி