அகத்தினழகு…..

அறியாமையா இல்லை
ஆசையின் உந்துதலா ?
பாதுகாப்பின்றியே
பெற்றுவிட்டனர்
பிள்ளைகளாய் உங்களை…
உணவுமில்லை
உடையுமில்லை
உறைவிடம் இல்லாது
உறவுகள் இன்றி
வீதியில் நீங்கள் …
சொத்தில்லை ஆனாலும்
மனதில் சோர்வில்லை
புன்னகைக்கும் குறைவில்லை
படிப்பறிவும் இல்லை இருந்தும் பண்பாட்டிலும் குறைவில்லை..
பகுத்துண்ணுவதிலும்
பரிவுகாட்டுவதிலும்
கோடிசொத்தில் புரளும்
கோடி மனங்களையும் வென்றுநிற்கிறதே
உங்கள் அகமும் முகமும்..
வழியில்லை தான்
வலியோடு தான் வாழ்வு
வருந்துகிறது மனதும்
ஆனாலும்
அளவில்லா உங்கள் ஆனந்தம்
அகத்தில் காணும் போது
கண்கள் பனிக்கிறது…#
ஜெசுதா யோ