அநாகரீகம்..!கவிதை கவிஞர்தயாநிதி

பெருமைகள்
பேசும்
பொல்லாத
உலகில்
விஞ்ஞானம்
காட்டுது
பந்தா,,!

மெஞ்ஞானம்
தொலைத்த
மேதாவிகள்
காட்டும்
வித்தைகள்
கோடி…

நாட்டில்
நீளுது..
செல்பி
கலாச்சாரம்
கை விட்டு
போனது
விழுமியம்.

போடுவது
சில்லறை
இவர்கள்
புத்தியும்
சில்லறை
ஆனதினால்.
வரையறை
தாண்டுது
நாகரீகம்.

தம்பட்டம்
அடிக்குது
போலித் தானம்.
நிதானம்
இழக்குது
மதியும்
நிம்மதியும்..

இல்லாதவன்
வாழ்வில்
இருப்பவன்
போடுறான்
வேசம்.!
விளம்பரம்
அம்பலம்..!

.ஆக்கம் கவிஞர்தயாநிதி