அழியா வரம்..கவிதைகலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி

நான்
நானாகவே
நீ
நீயாக
இருப்பாயெனில்
வந்து விடு..

தடங்கள்
பதிந்த
ஒவ்வொரு
காலடிகளையும்
கட்டி அணைத்து
நடந்த பாதைகளிலும்
நான் நானாகவே…

நீ.
நீயாக
நிமிர்கையில்
வா. பயணங்களும்
பாதைகளும்
முடிவதில்லை…

வெறும்
பதாதைகளிலும்
கொட்டொலிகளிலும்
முடிந்து போகும்
அரசியலில்லை.
வாழ்வின்
நாதமிது…

ஒரு கையில்
ஓசையில்லை
சேர்ந்து தட்டி
மெட்டுக் கட்டுவோம்
வா.நான் நானாகவே
நீ.நீயாக
நிமிர்ந்து வா..

உயிர்
நிறைந்தது
உண்மைக்
காதல்
உருவங்கள்
இல்லாத
உண்மைக்
காதல்
அழிவதற்கில்லை
நீயாக வந்து விடு
நாமாவேம்