பூக்களின் தேவதை…!கவிதை – வேலணையூர் ரஜிந்தன்.

உன் அழகாலே
…….என்னை ஆக்கிரமித்து
என் அன்பை
…….முழுவதுமாக ஆட்கொண்டவளே!

ஆழக்கடல் கொந்தளிப்பு
…….அடிமனதில் தேன்றுதடி…

ஆயிரம் பெண்களை
……..பார்த்திருப்பேன்…
அடியே உனைப்போல்
……..எவளுமில்லை!

அடை மழையும்
……..இடி மின்னலும்
புயலோடு வந்து
……..தாக்குதடி உன்னுருவில்!

பூவே உன்னை
……..நினைக்கும் நெஞ்சில்
புதுப்புது மாற்றங்கள்…
……..புல்லரிக்கும் இளமை!
பூப்பூக்கும் இதயம்!
………மெல்லச்சிரிக்கும் உள்மனம்!
உதட்டிலும் ஆனந்தம்!

கண்களிலும் பிரகாசம்!
………கன்னங்களில் உத்வேகம்!
உள்ளங்கால் முதல்
………உச்சம் தலை வரை
ஒருவித மின்சாரம் உற்பத்தி…

இடைவிடாத உன் ஞாபகம்
………தடை போடுது உறக்கத்தையும்!
கவிதை பாடுது கனவுகளும்;
………காதல் கானத்தையே நாடுது
செவிகள் இரண்டும்…

பிறந்தேன் எதற்காய்…?
………இன்று புரிந்தேன்
அது உனக்காய்…!

தவித்த தனிமைகள்
………தேவதையைக் கண்டதும்;
தேடுது இனிமைகள்!
………தெடருது புதுமைகள்!
தொலைதூரத்தில் நீ இருந்தும்!

வேலணையூர் ரஜிந்தன்.
ஈழம்