இந்த வேலிகளை நினைந்து கொள்ளுங்கள்

எவரும் எதுவும் தரப்போவதில்லை
யாரையும் குறை சொல்ல முடியாது
யாரும் ஒற்றுமையாக இருப்பதுமில்லை
சுருண்ட வாழ்வில் உருண்ட நாட்கள்
துயரம் அனைவரும் அறிந்த நாட்களே

இப்போ திறந்துவிடப்பட்ட கதவு சிரிக்கின்றது
யாரும் எதுவும் என்னவும் செய்யலாம்
மனக்கா பூ போல் அழகாய் இருப்பதால்
மயக்கும் வருடல்கள் தினமும் நடக்குதே
கனக்க கட்சிகள் வருகை கண்டதால்

வாருங்கள் வரவேற்கின்றோம் உங்களை
தாருங்கள் வலிகளை அல்ல வழிகளை
கூறுங்கள் புறணியையல்ல புது பரணியை
ஏறுங்கள் கதிரையில் எங்களை மறவாமல்
இந்த வேலிகளை நினைந்து கொண்டு

தே.பிரியன்