சிவன் கோயில் சிலை அழகே!

சிவன் கோயில் வாயிலிலே,
சித்திரம் கதை பேசயிலே,
சித்தம் குலைந்தவன் நான்…
சிந்தனை சுமந்தவன் தான்..!

சத்தியமாய் சொல்லுகிறேன்…
சாந்தமான பெண்மையவள்…
சலமின்றி வீசிய பார்வையில்;
சங்கடமின்றி சங்கதி சொன்னாள்..!

சாதுவான நடை நடந்தாள்…
சரளமாக கதை அளந்தாள்…
சங்கடங்கள் தீர்த்திடவே;
சத்திய தேவதை நித்தியமானாள்..!

வேலணையூர் ரஜிந்தன்.