எனக்கில்லை..கவிஞர் தயாநிதி

எங்கோ
தொலைவில்
கொலை.

எங்கோ
தொலைவில்
பாலியல் கொடுமை.

எங்கோ
தொலைவில்
இராணுவம்.

எங்கோ
தொலைவில்
ஆள் கடத்தல்..

எங்கோ
எவரோ பிள்ளையை
காணலையாம்…

இப்படியே
ஒரு இனத்தின்
கருவறுப்பு.

எல்லைகள்
தாண்டி எங்கள்
ஊருக்குள்
நுழையும் வரை….

எல்லாமே
வெறும் கேள்வி
எல்லாமே
யாருக்கோ….

எங்கோ
நடந்ததெல்லாலாம்
செய்தியாக….

ஈற்றில்
எங்கள் படலை
தட்டும் போது
விழித்தோம்
பலனின்றி போனது…

அகதிகளாக
ஏதிலிகளாக
வீடிழந்து ஊரிழந்து
நாடிழந்து நிற்கும்
போதும் மாற
முடியவில்லை….

ஆக்கம் கவிஞர்தயாநிதி