எழுது கலம்


என்
பணிவும்
குனிவும்
துணிவும்
உங்கள்
நிமிர்தலுக்கானது…
அழிவு
அநியாயம்
அக்கிரமம்
கண்டால்
குனிகின்றேன்.
எழுச்சிக்கான
எழுத்தாக்கி
அழுதலுக்கான
புற நிலை
அக நிலைகளின்
ஆற்றுகைக்காகவே…
அடிக்கடி குனிகின்றேன்.
எழுத்தாணி
எனும் தனிச்
சிறப்புண்டு.
கொடுமைகளின்
எதிர்க் குரலாக
எழுந்திடுவேன்…
அச்சம் என்
வாழ்வில் துச்சம்.
பேச்சும் மூச்சும்
வீச்சும் நீதிக்கானதும்
உண்மைக்கானதுமாகி
எழுதிடவே என்றும்
பணிகின்றேன்
குனிகின்றேன்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி