காதல்!கவிதை ஜெசுதா யோ

யாரையும் கட்டாயப்படுத்தி வருவதும் இல்லை
தானாக வந்த காதல்
தானாக போவதுமில்லை
விருப்பு என்பது
அவரவர் மனங்களைப் பொறுத்தது
நேற்றுவரை பிடித்த நான்
இன்று வெறுக்கப்படலாம்
நாளை மறந்தே போகலாம்
ஏன் நான் என்ற உருவம்
இல்லாது அழிந்தே போகலாம்
ஆனால் இதயம் என்ற
ஒன்றிருந்தால்
அதில் ஒருவர் தான் இருக்கமுடியும்
மாறி மாறி காதல் வந்தால்
அது காதல் இல்லை (காமம்)
எல்லைகள் கடந்து
மதங்கள் கடந்து
பேதங்களின்றி பார்த்த நொடி
பல நாள் பழகியது போல் ஓர் உணர்வு
ஏதோ ஒன்றுபிடித்துப் போனால்
வாழ்வின் இறுதிவரை
ஏன் கல்லறை வரை தொடரவேண்டும்
இது உண்மையாக உயிராக
காதலித்தால் உங்களாலே உங்களுக்கு
உணரப்படும் ஓர் உன்னத உணர்வு

காயங்கள் வந்தாலும்
காதல் தோற்பதில்லை
வலிகள் என்றாலும்
அன்பு மாறுவதில்லை

மாற்றம் உண்டென்றால்
உன் மனதில் யாரோ
இதயங்கள் இடமாறினால்
சில இதயங்கள் இறந்து போகும்

பேசினால் மட்டும் காதல் இல்லை
பார்த்திட்டு இருந்தால் மட்டும் காதல் இல்லை
பேசாது பார்க்காது காதலிக்கமுடியும்
என்றோ ஒரு நாள்
உண்மைக் காதல் வெல்லும்
போலிகள் நிலைக்காது

அழகு
நிலையில்லை
மாயை
அடிக்கடி மாறும்

அன்பு
அழியாதது
என்றும்
நிலையானது

இறந்தாலும்
உயிர் வாழும்
உண்மை அன்பிருந்தால்
உன்னை உலகம் போற்றும்

என் இறப்பின்
இறுதி நொடியில் கூட
இதயம் துடிக்கும்
அந்தக் கடசி நொடிகூட
உனக்காகக் தான்
என் அன்பின் சுவாசம் நீ
என் உயிர் நாடி நீ
நான் இறக்கும் போது
நீ உணர்வாய்
என் காதலை,என் அன்பை
அந்த ஒரு நொடி போதும்
என் காதலுக்கு,

அன்புடன்….
உன்னவள்

          ஆக்கம் ஜெசுதா யோ