பாமினி சிவசுப்பிரமணியம் இத்தாலி பலர்மோ..

தமிழ் இனி
மெல்ல சாகும்
என சபித்தோர்க்கு
இவள் சவால்.

இங்கு பிறந்து
வளர்ந்தாலும்
தாய் மொழியில்
தணியாத தாகம்
கொண்டு நிமிர்ந்தவள்.

தான் கற்றுக் கொண்ட
தமிழ் பாடசாலையிலேயே
ஆசிரியர் பணியில்…
பரத நாட்டியத்தை
முறைப்படி கற்று அரங்கேற்றி
ஆசிரியர் தரம் முடித்து
நடன ஆசிரியையுமானாள்…

தமிழர் ஒருங்கிணைப்பில்
இணைந்து தாயகப் பணியில்
மிகவும் தீவிர செயல் பாடு..
முத்தமிழை நேசிக்கும் இவள்
கற்பூரம்.இரண்டு நாள் ஒத்திகையுடன்
என்னோடு அரங்கேறி நாடகத்தில்
அசத்தியது கண்டு வியந்தவன்…

பெற்றவரின் ஒத்துழைப்போடு
முன்னேறும் பாமினி
மருத்துவத் துறையை நோக்கி
கல்வியில் நகர்கின்றாள்.
வைத்தியராக வரவேண்டும்
எனும் கனவு நனவாகிட நாமும்
வாழ்த்துவோம் வாருங்கள்.
காகத்தின் கூட்டிலும் எங்கள்
குஞ்சுகள் கூவுகின்றன.வாழியவே.
19.10.2017

கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி