****சீக்கிரம் வா என்னுயிரே***கவிதைவீரநேசன்

 

ஏக்கத்தில் அவன் நினைவில், மரநிழலின் மடியினில்
……..ஏகாந்தமான உறக்கத்தை நானும் இருக்கப்பிடிக்க,
தூக்கத்தின் பாதியில் என்னைத் துயில் எழுப்பி,
…….துக்கத்தை தந்து மறையும் துஷ்டன் அவனே!!
நோக்கம் மறைத்து நிதமுமென்னை நோகடிப்பவனே
……..நொடிப் பொழுதேனும் உன்னை மறக்க அருள்வாயா?
பார்க்கத்துடிக்கும் விழிகளுக்கு முதல்நீ பதில்கூறு-உன்மேல்
………படரத்துடிக்கும் என் இளமையை போடாதே கூறு.
சாக்குச்சொல்லி என்னிடம் நீயும் சரணடைய எண்ணாதே!!
……..சண்டையில் வெற்றியீட்டி சீக்கிரம் வா என்னுயிரே!!
ஆக்கம் வீரநேசன்கவிதை

Merken