செல்வி.சுபோஜினி பாலமுரளி அவர்களின் அரங்கேற்றம் 01.10.2017

 யேர்மனி வூப்பெற்றால் நகரில் 01.10.2017 மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அரங்கேற்ற வாய்ப்பாட்டுக்கச்சேரி சிறப்பாக இசைப்பிரியர்களுக்கு விருந்தளித்த நிகழ்வாக அமைந்திருந்தது.

ஈழத்தின் அளவெட்டி வித்துவான் குமரகுரு பேத்தியும், நாதஸ்வரவித்துவான் தென்மராட்சி பஞ்சாமிகேசன் நாகேந்திரன் மருமகளும், நாதஸ்வர வித்துவான் பாலமுரளி மகளுமான செல்வி.சுபோஜினி பாலமுரளி அவர்களின் அரங்கேற்றம் அனுபவம் வாய்ந்த கச்சேரியாக நிகழ்ந்தது. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

வந்தோரை பரவசத்தில் ஆழ்த்திய குரலாக காதுகளில் ரீங்கராம் இட்டகுரல் அவருடைய நிகழ்வை அரங்கேற்றம் என்று சொல்லிவிடமுடியாது ஆழுமைவாய்ந்த வித்துவான்கள் மிக எளிமையாக பாடுவார்கள் அதுபோல் இவரின் நிலை இருந்தது சிறப்புவாய்ந்த வெளிப்படையான குரல்வளம் சங்‌கீத அசைவுகளை தன்வசம் ஆக்கி நின்றதைகண்டு அனைவரும் வியத்து நின்ற அரங்கேற்றமாக இருந்தது அவருக்கு இனியவாழ்த்துக்களை தெரிவித்தவர்களுடன் சிறப்பாக இவருக்கான களம் உருவாக இவர் மேடைகளில் தன் குரலால் பிரகாசிக்க வளம்கொண்டு கலைதனில் வாழ stsstudio.comஇணையநிர்வாகத்தினரும் வாழ்துகின்றனர்

Merken