நான் ரசித்த பூவே

நான் ரசித்த பூவே..
நலமா.. நலமா..
நான் நினைப்பதெல்லாம் உனையே..
நிஜமா.. நிஜமா..
காதல் இம்சையென்றால் உலகம்..
தகுமா.. தகுமா..
(நான் ரசித்த பூவே…)

என் இதயம் வாழும் கூடு..
உன் கனவும் நினைவும் நிறைந்த வீடு..
என் உயிரே… நீயும் சொல்லு..
இனிதே… இனிதே… காதலென்று..
( நான் ரசித்த பூவே..)

என் ஆவி உன் வார்த்தை உறவாகுமா..
எந்நாளும் நம் வாழ்க்கை உயிராகுமா..
சொல்லாமல் கொல்வாயோ.. வெண்மேகமே..
சோகத்தில் தள்ளாடுதே என் தேகமே…
( நான் ரசித்த பூவே…)

பூவை விட்டு மணம் பிரியுமா..
பூஜைக்கென்று மட்டும் மலர் மலருமா..
பகலில் நிலவு காணத்தெரியுமா..
பாசமில்லா உணர்வு ரொம்ப கொடுமமா..
( நான் ரசித்த பூவே..)

கவித்தென்றல் ஏரூர்