பூவே புது ராகமே!கவிதை நகுலா சிவநாதன்

உன் நினைவுச்சக்கரத்தில்
என்னைச்சுழல விடுகிறாயே
என்ன சொல்லி இனி உன்னிடம்
தஞ்சமாய் நான் வர

பஞ்சமில்லை என் கனவுலகத்தில்
நீதான் வண்ணச்சித்திரமாய்
என் இதயராகம் மீட்டுகிறாய்

பூவே புது ராகமே புன்னகை மன்னனாய்
புதுத்தென்றல் வரவாய் தினம்
என் மனவானில் வரும்
சுழல்கின்ற தென்றல் நீதானே!

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்