மனதோடு……

துன்பமும் துயரமும்
தோல்வியும் ஆசையும்
இந்த மரத்தைப்போலவே
வளர்ந்திருக்கிறது
அதில் மலர்கின்ற மலர்களைப்
போலவே எனது மகிழ்ச்சியும்

காலங்கள் எல்லாம்
எனக்குள்ளேதான்
அடங்கியிருக்கிறது

எந்தநொடியிலும்
பெரும் வாசனை கொண்ட வசந்தத்தையும்
குளிர்விக்கும் கோடையையும்
அழவைக்கும் மாரியையும்
அழைத்துக்கொள்வேன்

சுபாரஞ்சன்