மட்டக்களப்பு கல்லடியில் சுபேசன் அவர்களின் இயக்கத்தில் உருவான ‚துணை‘ குறும்படத்தின் திரையிடப்படுகின்றது

நாளை சனிக்கிழமை 27.04.2019 அன்று பி.ப 3 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லடியில் சுபேசன் அவர்களின் இயக்கத்தில் உருவான ‚துணை‘ குறும்படத்தின் திரையிடலும், அது பற்றிய கலந்துரையாடலும் இடம் பெறுகிறது.

கலை இலக்கிய வட்டம்‘ நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்வின் போது ‚பெரியார் வாசக வட்டத்தின்‘ நூல் விற்பனையும் கண்காட்சியும் நடைபெறும்.

முகவரி: ஆனந்தசாலை மண்டபம், அரச விடுதி ஒழுங்கை, கல்லடி.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

04.08.2019 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ‚துணை‘ குறும்படம் திரையிடப்படுகிறது. இது பற்றிய மேலதிக விபரங்களை விரைவில் அறியத் தருகிறேன்.