அன்பு…

உதிராதப்பூக்கள் என்றால்
உள்ளத்தில் நிலைத்திருக்கும்
உண்மையான அன்பு ஒன்றே

உயிரைவிட உசத்தியாக
உயிர்த்தொட்டுப்பூத்திருக்கும்
உணர்வோடு கலந்திருக்கும்

உன்னத அன்பை நீ பெற்றால்
உன்னைவிட அதிஸ்டசாலி
உலகத்தில் எவருமில்லை
உரத்து நீ உரைத்திடுவாய்..

அன்பினால் புது உலகம் காண்போம்
ரதிமோகன்