அகிலம் உன் கையில்!கவிதை நகுலா சிவநாதன்

அகிலம் உன் கையில்
அடைந்திடு சிகரத்தை
துடிப்போடு எழுந்திடு
துாரமும் பச்சையாகும்
பட்டமரமும் துளிர்க்கும்
கிட்ட நெருங்கும் எண்ணமும்
இமயம் தொடும்
முயற்சி என்று ஒன்றிருந்தால்
முடியாதது எதுவுமில்லை
தன்னம்பிக்கை கொண்டு எழுந்திடு
தளராது முயற்சியைத் தொட்டிடு
அகிலம் உன் கையில்
அணைத்திட துடித்திடு
ஆக்கம் உன் கையில்
ஊக்கமாய் நீயும் எழுந்திட்டால்
வானமும் வசப்படும்
வையகமும் வாரி அணைக்கும்

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்