அம்மா!கலைஞர் தயாநிதி


என்னிடம்
வரிகளில்லை
வலிகளுண்டு…
எல்லாம்
முடிந்ததாய்
எல்லோர் நினைப்பும்…
எல்லாம்
மறந்ததாய்
உலக அரங்கு…
என் கண்களின்
ஔிப்பதிவில்
காட்சி மட்டுமா உன்
ஓலமும் பதிவானது….
திரை போட்டு
மறைக்கலாம்
என் மனத்திரையில்
நிழல் படமாகவே…..
தோன்றி…..
அம்மா
எதுவுமே நிரந்தரமில்லை
இன அழிவின் துயர்
மட்டுமே மனதில்
நீள் பயணம்…
முள்ளி வாய்க்கால்
வெறும் பதிவல்ல
அது எம் உயிர்ப்பு…..
நாடித் துடிப்பு…
விடியும் வரை …