அலைபோல் ஆசைகள் !கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

 

விண் முட்டும் ஆசைகள்
அடங்காத மனதினுள்
ஆசை மோகத்தால் அழிந்து போனோர்
எண்ணில்லாதோர்

ஆசையெனும் பெரும் ஆழம்
ஆழ்கடலையும் விஞ்சிவிடும்
ஆசைக்கு அடங்கிப்போனால்
ஆண்டியாய் அலைய வைத்து விடும்

அலைபோல் திரண்டு வரும்
ஆசை அலையை
மலைபோல் நின்று தடுத்து விடு

ஆசைகளை அடக்கும்
மனோபலம் எம்முள் உண்டு
அடக்கி வாழ்வோர் வாழ்வில்
வெற்றிகள் உண்டு

ஆசையெனும் கொடிய நோய்க்கு
தியானமே அருமருந்தாகும்
ஆசை பிடித்தவன் வாழ்வு
பேய் பிடித்தவன் போலானது
அண்டி வாழ யாருமின்றி
கதியற்று வாழ்வான்
ஆசையை துறக்கும் வரை .

 ஆக்கம்  -மட்டுநகர் கமல்தாஸ்