இசைமீளி 2018 பட்டத்தை பெற்றவர் செல்வன் .பிரவீனன் கிருபாகரன்

இளஞ்சூரியன் இசைக்குழுவினால் இரண்டாவது முறையாக யேர்மனியில் „இசைமீளி 2018“ என்னும் திரையிசைப் பாடப் போட்டி நேற்று (22.09.18 அன்று) புரூல் என்ற நகரில் நடைபெற்றது.நவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க இளந்தலைமுறையினரால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது..இந்நிகழ்ச்சியை ஐபுிசி வானொலி தொலைக்காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் பழம்பெரும் அறிவிப்பாளருமாகிய SK.Rajhen – பழம்பெரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமாகிய முல்லை மோகன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தனர்.இளஞ்சூரியன் இசைக்குழுவின் அற்புதமான இசைஅணைப்பில் 52 பாடகர்கள் யேர்மனி உட்பட லண்டன் கனடா நோர்வே ஆகிய நாடுகலிலிருந்து போட்டியாளர்களாக பங்கெடுத்திருந்தார்கள்.

நடுவர்களாக இளந்தலைமுறையினரைச் Stevecleve Valentine (Canada),Mirthula Sivanantharajah(Swiss) Nirijan Sehasothy(Germany) ஆகியோர் கடமையாற்றியிருந்தனர். இதில் இறுதியாக
இசைமீளி 2018 பட்டத்தை வென்றவர் யேர்மனியில் பிறந்து இப்பொழுது லண்டனில் வசிக்கும் செல்வன் .பிரவீனன் கிருபாகரன்