இராகசங்கமம் நிகழ்வில் தாயக இணைவாணர் கண்ணன், வர்ணராமேஸ்வரன்,சக கலைஞர்களோடு !

பல வருடங்களுக்கு பின் பிரான்ஸ் நாட்டில் எமது தாயக இணைவாணர் கண்ணன் அவர்களின் தலைமையில் தாயக இசையமைப்பாளர்களான தம்பிகள் இசைப்பிரியன், சாயிதர்சனோடு வர்ணராமேஸ்வரனாகிய நானும் பிரான்ஸ் நாட்டின் எமது சக கலைஞர்களோடு இணைந்து தமிழர் புனர் வாழ்வுக் கழகம் நடத்திய 11 வது இராகசங்கமம் பாடல் போட்டிநிகழ்வின் பின் நாம் நிகழ்த்திய மாபெரும் இசை நிகழ்ச்சி. எமது உறவுகள்¸ இசை இரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது மட்டுமல்லாமல் எமக்கும் புதிய உற்சாகத்தையும் தந்தது. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை கலைஞர்களாகிய நாம் உணர்ந்த தருணங்கள்.