உண்மை

உன்னிடம்
உள்ள
உடமைகளிலேயே
உயர்ந்த சொத்து,
உன் வாய்மை ஒன்றே!.
உண்மை
உன்னிடம்
உள்ளவரை .
உறவுகள் மத்தியில்
உன் தலை என்றும்
உயர்ந்து நிற்கும்.
உரிமையான
உறவுகளுக்கும்,
உன் நட்புகளுக்கும்,
உன்மேல்
உள்ள
உயர்ந்த மதிப்பை
உனது ஒருசில
உதவாக்கரை பொய்களால்
உதாசீனம் செய்து
உன்னதமான அன்பை ,
உடைத்தெறிந்து விடாதே.
உண்மையை பேசும் போது
உன் நாவில் நிதானமும்
உன் முகத்தில் பிரகாசமும்
உண்டாகி மிளிர்வதை
உன்னாலேயே உணரமுடியும்.
உண்மையை மறைத்தோ,
உள்ளதை மறுத்தோ
உன் வாக்கை
உதிர்க்கும் போது
உன் நாக்கில்
உளறலும்
உள்ளத்தில் பதட்டமும்
உருவாகிறது, அது
உடலுக்கே தீங்காகி
உன் எதிர்காலத்தையே
உருக்குலைந்து விடுகிறது.
உண்மையை பேசு
உத்தமானாய் வாழ்
..
மெய் நேசன்