உரிமையின் மறுப்பு

பகைவரின் வெற்றி
நாம் பயந்திட அல்ல
சொத்தின் இழப்பு
நாம் செத்திட அல்ல
சொந்ததின் இழப்பு
சோகமாய் நாம் வாடிட அல்ல.
உரிமையின் மறுப்பு
நாம் உறங்கிட அல்ல..
சதியால் இழந்த மண்ணை
சரித்திரம் தேடித் தராது
எட்டுதிக்கும் உள்ளோம்
எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம்
ஆளுமையும் ஆளுகையும்
உந்தனுக்கு இல்லையென்றால்
வீடுமில்லை நாடுமில்லை
தமிழனே நீயும் நம்பு..
*பாமினி சத்தியமூர்த்தி *