ஊமையாகிப் போகிறேன் !கவிதை ஜெசுதா யோ

உயிரென நினைத்த
உறவுகள் இங்கே
உருமாறிப் போகக் கண்டு
உள்ளம் உடைந்து போனேன்

காலங்கள் மாறும்
கவலைகள் தீரும் என்று
காத்திருந்து நான்
கண்ணீரோடு கடக்கிறேன்

உரிமையில்லாத இடத்தில்
உள்ளம் திறந்து பேசிட முடியாது
உருகும் என் கண்ணீரோடு
ஊமையாகிப் போகிறேன்

மாறும் மனதால்
மனம் உடைந்து போனேன்
பொய்யான அன்பால்
மெய் இருக்க உயிர் இழந்து போகிறேன்

பேசிப் பயனில்லை
பேசாது இருக்க முடியவில்லை
வலிகள் என்றாலு
விலகிக்கொள்கிறேன்

ஓடி ஒளிந்து வாழும்
வாழ்க்கை நிலையகற்றி
நான் மறைந்து போகிறேன்
மறந்தல்ல நினைவுகளை சுமந்து போகிறேன்

  ஆக்கம் ஜெசுதா யோ