தபேலா வித்துவான் திரு. தேவகுருபரன் பற்றி ஓர்பார்வை

அற்புதக் கலைஞன் திரு.தேவகுருபரன் சண்முகலிங்கம் அவர்கள் இவர் ஓர் சிறந்த தபேலா வித்துவானக சிறந்து விளங்குகின்றார் .

திரு. தேவகுருபரன் சண்முகலிங்கம் அவர்களை ஜேர்மனியில் வாழும் தமிழர்கள் இடையில் மட்டுமல்ல ஐரோப்பிய இசைக்கலைஞர்களுடனும் இணைந்து எமது கலைவளங்களை பரப்பிவரும் ஓர்சிறந்த கலைஞர்   தோல் தாளவாத்தியக்கலைஞர் தேவகுருபரன்

தாளவாத்திய மீட்டலை தன் உயிராக நேசிக்கும் அற்புத்கலைஞன் புலத்தில் அதாவது யேர்மனியில் கடந்த 30ஆண்டுக்கு மேலாக தன்பணியாற்றிவரும் ஓர்கலைஞர்தான் கலைஞர் தேவகுருபரன்

பரதநாட்டிய நிகழ்வாகட்டும் வேறு இசை நிகழ்வுகளாகட்டும் தபேலா கருவியில் இவர் கைகள் நர்த்தனமாடி இசையை காதுகுளிர கேட்க வைக்கக்கூடிய அற்புதக் கலைஞன் தாளவாத்தியக்கலைஞர் தேவகுருபரன்

இவர் தபேலா வாத்தியத்தை தன் கைவிரலால் மீட்டும் போது அவர்கைவிரல்கள் வாத்தியக்கருவியில் நர்தனம் ஆடும் அது எமது காதோடு வந்து நீங்காத  நாத ஒலிபேசும் அல்ல அங்கிருந்து நாதமொழியும் பிறக்கும்.

ஒரு கைதேர்ந்த கலைஞனின் விரல்கள் வாத்தியக்கருவியிருந்து இசையை உயிர்பெற்றெழச் செய்யும்.ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமல்ல காதல் கொள்ள முடியும் வாத்தியக் கலைஞனின் கைவிரல்களும் வாத்தியக்கருவியின் ஸ்பரிசம் தொட்டு நிற்கையிலே தெவிட்டாத நாத ஒலி எம் செவிகளை நிறைக்கும். கலைஞனே திரு.தேவகுருபரன்

அவரின் நிகழ்ச்சிகளைப்  ஓர்முறை பார்த்தவர்  மீண்டும் மீண்டும் பார்க்க கேட்க  ஆர்வம் கூடும்  அற்புத வாத்தியக் கலைஞர் தேவகுருபரன்.

அவரின் இசைஞானம் அவரை ஜேர்மனிய இசைக்குழுவுடன் இணைய வைத்து அவரின் ஆளுமையும் ஆற்றலும் இன்னும் இன்னுமாய் பெருகி வளர்கிறது. மட்டுமல்லாமல் தனக்கென தனியிடம்பிடித்து தன் வருங்கால வாரிசுகளாக  பலருக்கு வாத்தியக்கருவிகள் கற்பித்தலுடன் இவர் தமது பிள்ளைகளையும் இசைத்துறையில் ஈடுபடுத்தி வருவது கண்டு மகிழ்கிறோம், வாழ்த்திப் பாராட்டுகிறோம்.

ஒரு அற்புதமான தாளவாத்தியக் கலைஞனை இங்கே பதிவிட்டு மகிழ்ந்து பெருமை கொண்டு அவரை வாழ்த்திப் பாராட்டுகிறோம்.

எஸ் ரி எஸ்ஈழம்  இணையமும்வாழ்த்தி நிற்கின்றது