நட்பு….கவிதை கவிஞர் தயாநிதி

இனம்
மொழி
மதம்
கடந்த
புனித பந்தம்.

நீ
நான்
எனும்
பிடி கடந்த
ஆத்ம பந்தம்.

வெற்றி
தோல்வி
இன்பம்
துன்பம்
அனைத்திலும்
ஒன்றான பந்தம்..

எல்லா
இடங்களிலும்
எல்லா
மனங்களிலும்
நட்பு வரமானால்
வையத்தின்
அழகே தனி
அழகாகும்.

அல்லாவும்
யேசுவும்
ஆனைமுகக்
கடவுளும்
உன்னோடு
உயிரான பந்தத்தின்
பங்காளியாவர்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி