நாணுகின்றாளோ..

நங்கையிவள் நகம் கடிக்க..
நாணுகின்றாளோ..
நாலுவகை குணம் உதிக்க.. வாடுகின்றாளோ..
அங்கழகில் முகம் ஜொலிக்க..
தன்னை மாற்றுகின்றாளோ..
அந்தரங்க கணை தொடுக்க..
பெண்மையைக் காட்டுகின்றாளோ..
செங்கரும்பு இதழ்கள்
செங்குருதிக் கடலோ..
கை விரல்கள் ஊற
செய்ததென்ன தவமோ..
கெண்டை விழியிரெண்டும் கெஞ்சுவதென்னவோ
கொஞ்சி விளையாட ,
கொள்ளை கொள்ளுதோ..

கவித்தென்றல் ஏரூர்