***நீங்காத நினைவுகள்***

தொலைந்து போக நான் ஒன்றும்
தனிப்பிறவி இல்லையே கண்ணா!!
நிலையாக உன்னெஞ்சிலே என்றும்
நீக்கமற நிறைந்திருப்பவள் தானே .
கலைந்துபோன காலமத்தை கண்டு நீயும்
கண்ணீர் விட்டு அழுவது கேட்டு,
குலைந்து போகிறேன் எந்நாளும் நான்,
குற்றுயிராகியே குமுறி அழுகிறேன்.
நிலைத்து வாழ்வோம் என நாமும்
நினைத்து வாழ்ந்த வாழ்வு இங்கே .
நிலைகுலைந்து போகுமென்று யாரும்
நினைத்துப் கூடப் பார்க்கவில்லையே .
.
நிலையாத நேசி.