****மனச்சோர்வு*****

மாலைக் கதிரவன் தன் ஒளியை,
மங்கலாக்கிக் கொண்டுமே,
மலை உச்சி ஒன்றைத்தேடி,
மறைந்து கொள்ளும் இனிய பொன்
மாலைப் பொழுது தனிலே…
மணாளன் அவன் பணிமுடித்து,
மாட்டு வண்டியேறி வீடு நோக்க .
மாய்ச்சலோடு வரும் அவனது,
மனதை குளிர வைக்கவே,
மஞ்சள் தேய்த்துக் குளித்து,
மங்கை இவளும் காத்திருக்க .
மணிச்சத்தம் மெல்ல கேட்டதுமே
மலர்ந்த முகத்தோடு வரவேற்க,
மண்குடிசை விட்டு வெளியேறி
மணல் முத்தத்துக்கு ஓடிவந்த தன்,
மனைவியின் முகத்தில் அவனும்
மனம் போல முத்தங்களை
மழைபோல பொழிந்துதள்ளி,
மனச்சோர்வை உயிர்ப்பித்தபடியே,
மடிதேடி அவனும் , உடற்சோர்வு தீரவே
மல்லாந்து படுத்துக்கொண்டான்..
….தொடரும்.
..மடி நேசன்