யேர்மன் கல்விச்சேவையின் 28வது ஆண்டுவிழா 07.10.2017 சிறப்பாகநடந்தேறியது!

யேர்மனியில் யேர்மன் தமிழ் கல்விச்சேவையினரால் முன்னெடுக்கப்பட்ட.28 ஆண்டுதன்பணியாற்றி நிற்கின்ற ஆற்றிக்கொண்டு இருக்கின்ற கல்விச்சேவையின் பணி சிறந்து விளங்கி நிற்கின்றது அந்த வகையில் இதன் 28 ஆண்டுவிழா யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பாக 07.10.2017 முன்னெடுக்கப்பட்டது

இதில்பிரதம அதிதியாக பாரிஸ் உயர்கற்கைபீட பேராசிரியர் சச்சிதானந்தன் அவர்கள் வருகைதந்து சிறப்பித்திருந்தார்

அத்துடன் யேர்மன் தமிழ் கல்விவளர்ச்சிக்கு கல்விச்சேவையின் அயராத உழைப்பு பாராட்டவேண்டிய விடயம்.28 வருடங்களை கடந்து பல்வேறு மாநகரங்களில் , மாநிலங்களில், அயல் நாடுகளிலும்தன் சேவை முன்னெடுப்பதைபாராட்டினார்

அத்தோடு இதன் பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்களையும் இணைந்த குழுமத்தையும் பாராட்டி
வாழ்த்தினார் .

அதைவிட இவ் நிகழ்வில் பல நகர சங்கீத ஆசான்களை ஒன்றினைத்து ஒற்றுமையாக சிறப்பான கச்சேரியை திறம்பட ஆற்றியமைக்கு சங்கீத ஆசிரியர்கள் மற்றும் நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார் :