வெறி….!!கவிதை கவிஞர் தயாநிதி

 

மதங்களின்
பெயராலே
மனங்களை
வெல்பவன்
மனிதனாகின்றான்..!

மதங்களின்
பெயராலே
இனங்களை
அழிப்பவன்
மிருகமாகின்றான்..!

குணங்களால்
உயர்ந்து
அமதியால்
உயர்ந்தவன்
போதி மரத்தின்
கீழ் ஞானம்
பெற்ற திரு மகன்..!

தர்மங்களால்
உயிர்களை
நேசித்த
புத்தனின்
புத்திரர்களின்
சாத்வீகம்
சமாதியானது.;!

போதனகளை
மறந்து
போதையில்
இன அழிப்பு
சாகசத்தில்
தீவிரமாயினர்
காவிக்கு களங்கம்
துலங்குது மண்ணில்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி