உறவின்
உயிர்ப்பிற்காய்
உழைப்புக்கள்
சேதமாகின்றன.
ஏங்கும்
உயிர்களின்
உள்ளுணர்வை
ஊரறிவதில்லை…
பாரில் பல
ரகங்களில்
பச்சோந்திகள்
சுய நல முகாம்களில்…
சதி பின்னும்
சத்தில்லா சதுரங்க
ஆட்டங்கள்
அரங்கேறுது..
உலகம்
சுருங்கியது போல்
உள்ளங்களும்
சுருங்கி உருவிழக்குது…
ஆக்கம் கவிஞர்தயாநிதி