********இயற்கையின் எச்சங்கள் ***


படர்ந்து கிடக்கும் பச்சை புல்வெளியின் ,
பசுமை கண்டேன், பார்த்து நின்றேன் ,
அடர்ந்து கிடக்கும் ஒழுக்கமான மரங்களின்
அழகைக் கண்டேன் ஓய்ந்து போனேன்.
தொடர்ந்து ரீங்காரிக்கும் வண்டினங்களின்
வடிவில் நானும் வசமாகி லயித்திருந்தேன் .
இடர் ஏதும் தராத ,இந்தஎழில்மிகு நேர்த்தியான
இயற்கையின் எச்சங்கள் தானே ,நாமானோம் ?
சுடர் விட்டெரியும் வஞ்சகம் பொறாமை
சூதுகளை எங்கிருந்து கற்றோம் நாமும் ?
விடை தெரியாது நானும் வியந்த படியே
விதியே என்று அமர்ந்து ரசித்து மகிழ்ந்தேன் .
இயற்கை நேசன்