என்னைக் கொன்றவளே

கொள்ளைப் பேரழகு
கொண்டவளும் நீதானடி ,
கொள்ளையடித்த என் மனதை
கொத்திக்கொத்தி தினமும் ,
கொன்று ,ருசித்து ரசிக்கும்
கொடுமைக் காரியும் நீயே தானடி .
கொஞ்சமாவது இரக்கம் காட்டி,உந்தன்
கொஞ்சும் கண்களால் என்னை, இனியும்
கொல்லும் விளையாட்டை நிறுத்தாயோ ?
கொண்ட காதலினாலே என் இதயமும் .
கொதித்து எழுந்து , இடம் பெயர்ந்து ,
கொள்ளிடமற்ற அகதியாய் அலைந்து ,
கொல்லாமல் கொல்லுதடி என்னை,
கொண்டவளாகிட மறுத்து நீயும் ,என்னை
கொன்றவள் ஆகிவிடாதே கண்ணே .
விழி நேசன்