குடிசைகளில்.!கவிதை கவிஞர்தயாநிதி

இருப்புக்குள்
விருப்புக்கள்
நிறைவாகும்
குடிசைக்குள்
அடுப்புக்கும்
நெருப்புக்கும்
குறைவில்லை.

அகலக் கால்
ஆசைகளால்
நாளாந்தம்
தொல்லைகளும்
எல்லைகள் தாண்டிய
சோகங்களுமே
அறுவடை காண்..

மற்றவன்
மனங்களில்
மகிழ்ச்சியால்
கூடு கட்டிட
பாராட்டும்
பண்பினை
பதியம் செய்….

நான் என்ற
அலங்காரம்
அகங்காரம்
கொண்டு ஓங்காரம்
செய்வோரை
சங்காரம் செய்.

நாம் எனும்
நல்லெண்ணம்
கொண்டு தினம்
நகர்ந்து பார்
நிமிர்ந்து பார்ப்பர்
பழகிப் பரவசமாவார்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி