காதல் நோய்..!

க(ன்னி)ண்ணிரெண்டால் திருடி விட்டு
கவிதையெழுத வைத்து விட்டாள்
கண்டபடி உளருகிறேன் – என்
கற்பனையை எழுதுகிறேன்

காதல் போல காயம் தரும்
கடும் ஆயுதம் ஏதுமில்லை
கவியெழுத காகிதத்தை..
காதலித்தால் ஏதுபிழை

புவியழுது புலம்ப வைக்கும்
காதல் நோய் தான் போல..
புன்னகைக்கும் பூவைக் கூட ,
வண்டு காதலித்தால் பாவம் போல..

மன உள்ளழகை வெளிக்கொணரும்
பெண் காந்தம்
மனம் உண்மைகென்று காதலித்தால்
பெண் சாந்தம்
இக்குணமிருந்து காதலிக்க வேண்டும்
இப்படி முகவரியைக் காதல் தீண்டும்

கவித்தென்றல் ஏரூர்